ஆன்மிகம்
பக்தர்கள் விமான அலகு போட்டு நேர்த்திக்கடன் செலுத்திய போது எடுத்த படம்.

விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

Published On 2021-03-17 05:31 GMT   |   Update On 2021-03-17 05:31 GMT
விருத்தாசலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
விருத்தாசலம் சந்தை தோப்பில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் இரவில் சாமி வீதிஉலா நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது.

இதையொட்டி விருத்தாசலம் மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், தீச்சட்டி எடுத்தும், 60 அடி அலகு குத்தியும், விமான அலகில் வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள். தொடந்து தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இன்று(புதன்கிழமை) திருவிளக்கு பூஜையும், அம்மன் வீதிஉலாவும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் ராஜா, பாலசுப்பிரமணியன் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News