செய்திகள்
நாகூர் தர்கா அலங்கார வாசலில் நுங்கு விற்பனை நடைபெற்ற போது எடுத்தபடம்.

நாகூரில் சுட்டெரிக்கும் வெயில்: நுங்கு விற்பனை மும்முரம்

Published On 2021-04-06 14:32 GMT   |   Update On 2021-04-06 14:32 GMT
நாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.
நாகூர்:

நாகப்பட்டினம் மாவட்டம் நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது இந்த தர்காவிற்கு நாள்தோறும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் நாகூர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக வெயில் அதிகமாக சுட்டெரித்து வருகிறது. இதனால் மக்கள் பகலில் வெளியே வரவே அச்சப்பட்டு கொண்டு வீடுகளில் முடங்கி கிடக்கின்றன.

பகலில் சுட்டெரிக்கும் இந்த வெயில் தாக்கம் இரவிலும் காணப்படுகிறது. கத்திரி வெயில் என்னும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து கொண்டுசெல்கிறது.

உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், நுங்கு, தர்ப்பூசணி உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிடுகின்றனர். நாகூரில் நுங்கு விற்பனை மும்முரமாக நடக்கிறது. இதுகுறித்து நுங்கு வியாபாரி கூறியதாவது:-

வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் நுங்கை வாங்கி செல்கின்றனர். கடந்த ஆண்டு ஒரு நுங்கு சுளை ரூ.4-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு பனை மரங்களில் நொங்கு காய்ப்பது இல்லை.

மரங்களில் ஏறி நுங்கு வெட்டும் தொழிலாளர்களுக்கு கூலி கொடுக்க வேண்டி உள்ளதால் இந்த ஆண்டு ஒரு நுங்கு சுளை ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News