செய்திகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

Published On 2021-06-20 05:46 GMT   |   Update On 2021-06-20 05:46 GMT
தமிழகம் முழுவதும் இருந்து வரும் அழைப்புகளுக்கு மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: 

சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழக தலைமை அலுவலகத்தில் மின் நுகர்வோர் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தயாநிதி மாறன் எம்.பி., உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்றனர். 



மின் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட மின்சாரம் தொடர்பான புகார்களை 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தமிழகம் முழுவதும் இருந்து வரும் அழைப்புகளுக்கு இச்சேவை மையம் மூலம் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News