ஆட்டோமொபைல்
விலை உயர்வு விவரங்களை வெளியிட்ட மாருதி சுசுகி
மாருதி சுசுகி நிறுவனத்தின் கார் மாடல்கள் விலை இந்தியாவில் ரூ. 22,500 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் தனது கார் மாடல்கள் விலை செப்டம்பர் மாதத்தில் உயர்த்தப்போவதாக மாருதி சுசுகி நிறுவனம் கடந்த மாதமே அறிவித்தது. அந்த வரிசையில், மாருதி சுசுகி கார் மாடல்கள் விலை 1.9 சதவீதம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இதன் காரணமாக கார் மாடல்கள் விலை ஆயிரம் ரூபாயில் துவங்கி, அதிகபட்சம் ரூ. 22,500 வரை உயர்த்தப்படுகிறது. ஒவ்வொரு மாடலின் விலை உயர்வு விவரம் பின்வருமாறு..,
ஆல்டோ மாடலுக்கு ரூ. 16,100
வேகன்ஆர் மாடலுக்கு ரூ. 12,500
எஸ் பிரெஸ்ஸோ மாடலுக்கு ரூ. 7,500
விட்டா பிரெஸ்ஸா மாடலுக்கு ரூ. 10 ஆயிரம்
டிசையர் மாடலுக்கு ரூ. 10 ஆயிரம்
ஸ்விப்ட் மாடலுக்கு ரூ. 13 ஆயிரம்
பலேனோ மாடலுக்கு ரூ. 15,200
இக்னிஸ் மாடலுக்கு ரூ. 14,680
சியாஸ் மற்றும் எஸ் கிராஸ் மாடல்களுக்கு ரூ. 20,500
டூர் எஸ் மாடலுக்கு ரூ. 20,300
ஈகோ மாடலுக்கு ரூ. 22,500
எர்டிகா மாடலுக்கு ரூ. 20 ஆயிரம்
எக்ஸ்.எல்.6 மாடலுக்கு ரூ. 12,311