செய்திகள்
ஓட்டு போட்டுவிட்டு வெளியே வந்த வாக்காளர்கள்

ஜம்மு காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்- முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

Published On 2020-11-28 02:52 GMT   |   Update On 2020-11-28 02:52 GMT
ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
ஜம்மு:

ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் வருகிற டிசம்பர் 19ந்தேதி வரை மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 234 பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 22ந்தேதி நடைபெறும். இதில் முதல்கட்ட வாக்குப்பதிவு பலத்த பாதுகாப்புடன் இன்று காலை தொடங்கியது. 

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில், பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன.

இதேபோன்று தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, மக்கள் மாநாட்டு கட்சி மற்றும் சி.பி.ஐ. (எம்.) ஆகியவை முக்கிய கட்சிகளாக போட்டியிடுகின்றன.

மொத்தம் உள்ள 280 தொகுதிகளில் இன்று காஷ்மீரில் 25 மற்றும் ஜம்முவில் 18 என மொத்தம் 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. பிற்பகல் 2 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். தேர்தலை முன்னிட்டு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன், பலத்த பாதுகாப்புகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
Tags:    

Similar News