உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்

கோவையில் ஓட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டு கைது

Published On 2022-01-12 09:56 GMT   |   Update On 2022-01-12 09:56 GMT
ஒட்டலில் சாப்பிட சென்ற வாலிபரை தாக்கிய ஏட்டுவை போலீசார் கைது செய்தனர்.
கோவை:

கோவை துடியலூர் அருகே உள்ள குருந்தாசாக நகரை சேர்ந்தவர் சரவண குமார் (வயது 38). சம்பவத்தன்று இவர் தனது நண்பர் தீபக் என்பவருடன் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சாப்பிடுவதற்காக சென்றார். 

அப்போது அங்கு வந்த சப்ளையரிடம் சரவணகுமார் சைவ உணவு வேண்டும் என்று கேட்டார். ஆனால் சப்ளையர் அசைவ உணவை கொண்டு வந்து கொடுத்தார். இதுகுறித்து சரவணகுமார் கேட்ட போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர் கிஷோர் (46) சரவணகுமாரை தாக்கினார். இது குறித்து அவர் துடியலூர் போலீசில் புகார் செய்தார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்க வில்லை. பின்னர் சரவணகுமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் செய்தார். 

இதனையடுத்து அவரை தாக்கிய கிஷோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஓட்டல் உரிமையாளர் துடியலூர் போலீஸ் நிலையத்தில் ஏட் டாக பணிபுரிந்து வந்தார். அப்போது அவர் மசாஜ் சென்டரில் லஞ்சம் பெற்றதாக கடந்த ஜூன் மாதம் சஸ்பெண்டு செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட கிஷோரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags:    

Similar News