செய்திகள்
கோபிநாத்

தாராபுரம் வாலிபர் கொலை கொலையாளிகளுக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2021-07-19 10:55 GMT   |   Update On 2021-07-19 10:55 GMT
கோபிநாத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள விராச்சிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 21). சுமைதூக்கும் தொழிலாளி. இவர் மடத்துப்பாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது அவரை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டிக்கொன்றனர். 

இதுகுறித்த தகவல் அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு
ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.  

இதையடுத்து ஆஸ்பத்திரி முன்பு கோபிநாத்தின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொலையாளிகளை கைது செய்யக்கோரி  இந்த போராட்டம் நடைபெற்றது.  

போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து கோபிநாத் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். கோபிநாத்தை கொன்ற கொலையாளிகள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News