செய்திகள்
நாளை மறுநாள் முதல் இலவச சிலம்பம் - களரி பயிற்சி
உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிலம்ப பயிற்சி வகுப்புகளை உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைக்கிறார்.
உடுமலை:
உடுமலை உழவர் சந்தை எதிரே உள்ள முழு நேர கிளைநூலகம் எண் 2 நூலக வாசகர் வட்டம் கடந்த 3 ஆண்டுகளாக பகத்சிங் சிலம்பம் களரி மார்ஷியல் ஆர்ட்ஸ் அறக்கட்டளையின் சார்பில் இலவச சிலம்பம் மற்றும் களரி பயிற்சி வழங்கி வருகிறது.
இந்த நிலையில் கொரோனா காரணமாக நடைபெறாமல் இருந்த சிலம்பம் மற்றும் களரிக்கான இலவச பயிற்சிகள் மீண்டும் வருகிற 11-ந்தேதி (சனிக்கிழமை) முதல் தொடங்கப்படுகிறது.
உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் நடைபெறும் சிலம்ப பயிற்சி வகுப்புகளை உடுமலை காவல்துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து கொரோனா விழிப்புணர்வு மற்றும் உடற் பயிற்சியின் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பதாகைகளுடன் மாணவர்கள் ஊர்வலம் நடைபெறும்.
காலை 9 மணிக்கு உடுமலை மகாத்மா காந்தி உண்டு உறைவிடப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டு பழைய பஸ் நிலையம் வழியாக நூலகத்தை வந்தடையும் இதில் மாணவர்கள் முககவசம் அணிந்து, தனிமனித இடைவெளியுடன் கலந்து கொள்ள உள்ளனர்.
இதையடுத்து சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு அளித்த தமிழக முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.