செய்திகள்
உள்துறை மந்திரி அமித்ஷா

அமித்ஷா தலைமையில் திருப்பதியில் இன்று தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம்

Published On 2021-11-13 21:31 GMT   |   Update On 2021-11-13 21:31 GMT
திருப்பதியில் இன்று நடைபெறும் தென்மண்டல கவுன்சில் கூட்டத்தை முன்னிட்டு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திருப்பதி:

திருப்பதியில் தெற்கு மண்டல கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்துக்கு உள்துறை மந்திரி அமித்ஷா தலைமை தாங்குகிறார்.

இந்த கூட்டத்தில் ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்கள் புதுச்சேரி, லட்சத்தீவு, அந்தமான் ஆகிய யூனியன் பிரதேசங்கள் கலந்து கொள்கின்றன என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் தென்னிந்தியாவின் வளர்ச்சி, பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தப்படுகிறது.

கூட்டத்தில் பங்கேற்க புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை மற்றும் பல்வேறு அதிகாரிகள் திருப்பதிக்கு வந்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News