செய்திகள்
கோவையில் வாலிபரை தாக்கிய 4 பேர் கைது
கோவையில் வாலிபரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை சேரன் மாநகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 39). தனியார் நிறுவன ஊழியர். நேற்று முன்தினம் இவரது 10 வயது மகன் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தான். இதை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (22) என்பவர் கண்டித்து, வேறு பகுதியில் விளையாடுமாறு கூறியுள்ளார். இது தொடர்பாக சிறுவனின் தந்தையான சரவணனுக்கும், கோவிந்தராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது சரவணனும் அவருடைய நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து, கோவிந்தராஜை கட்டை மற்றும் கற்களால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், விஜயன், மதனகோபால், அரவிந்த் குமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.முன்னதாக தகராறின் போது கோவிந்தராஜ், சரவணனின் மனைவியை கல்லால் தாக்கியதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோவிந்தராஜ் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.