செய்திகள்
கைது

செய்யாறில் பைனான்சில் திருடிய 2 வாலிபர்கள் கைது

Published On 2021-10-08 11:09 GMT   |   Update On 2021-10-08 11:09 GMT
செய்யாறில் பைனான்சில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
செய்யாறு:

செய்யாறு அருகே உள்ள விண்ணவாடி கிராமம் கதிர்வேல் மகன் சக்திவேல் வயது 34, என்பவர் செய்யாறு பஸ் நிலையம் அருகே பைனான்ஸ் நடத்தி வருகிறார்.

நேற்று முன்தினம் மதியம் ஊழியர்கள் சாப்பாட்டிற்கு சென்று திரும்பிய போது பைனான்சின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்து, உள்ளே இருந்த கல்லாவை திறந்தபோது அங்கிருந்து ரூ.12,500 திருடிச் சென்றுள்ளது தெரியவந்தது.

இது சம்பந்தமாக செய்யாறு போலீசில் புகார் செய்தார். சப்- இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து, அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது 2 வாலிபர்கள் தெரிந்தது.

மேலும் இதேபோல 20 நாட்களுக்கு முன்பு 2 நிதி நிறுவனத்தில் திருடு போயிருந்தது. அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது அதே 2 வாலிபர்கள் தெரியவந்தது.

இந்நிலையில் அதே வாலிபர்கள் நேற்று ஒரு பைனான்ஸில் திருட முயற்சி செய்தபோது ரோந்து சென்ற போலீசார் அவர்களை மடக்கிப் பிடித்தனர்.

பிடிபட்ட 2 வாலிபர்களும் திருச்செங்கோடு புதூர் கிராமத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது27), ஈரோடு நாப்பியாளத்தை சேர்ந்த அருண் குமார் (30) என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News