லைஃப்ஸ்டைல்
காட்டன் நாப்கின்

மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்ததா?

Published On 2021-07-05 07:31 GMT   |   Update On 2021-07-05 07:31 GMT
காதணி முதல் கண்கவர் ஆடைகள் வரை விதவிதமான டிசைன்களை ஆன்லைனில் ரசித்து பார்த்து ஆர்டர் செய்யும் பெண்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
“பெண்கள் கடைக்கு சென்று மாதவிடாய் கால நாப்கின் வாங்கும் விஷயத்தில் அசவுகரியங்கள் இருக்கத்தான் செய்கிறது. வீட்டிலுள்ள ஆண்களிடம் நாப்கின் வாங்கி தர சொல்வதற்கு ஒருவித தயக்கம் இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள்தான் நேரடியாக சென்று வாங்க வேண்டி இருக்கிறது. கடையில் கூட்டமாக இருக்கும்போது கேட்பதற்கும் சில பெண்கள் தயங்குகிறார்கள்.

நாப்கினை பேப்பரில் மடித்து வாங்கி வீட்டுக்கு கொண்டு வரும்போது மன நெருக்கடியையும் எதிர்கொள்கிறார்கள். மாதவிடாய் காலங்களில் நாப்கின் வாங்கும் விஷயத்தில் நானும் நெருக்கடியை சந்தித்திருக்கிறேன். “நாப்கின்களில் பல பிராண்டுகள் இருந்தாலும் அதுபற்றிய புரிதல் பெரும்பாலான பெண்களுக்கு இல்லை. தங்களுக்கு பொருத்தமான நாப்கின்களை தேர்வு செய்வதற்கும் ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் தேவையற்ற சரும பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். நாப்கின்களை சீரான இடைவெளியில் மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும். அதனை அசவுகரியமாக கருதி நீண்ட நேரம் பயன்படுத்தவும் செய்கிறார்கள். நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை நாப்கினை மாற்ற வேண்டும் என்பது சுகாதார நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

காட்டன் நாப்கினைகளை உபயோகித்தால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதற்கு சிரமப்பட்டு நிறைய பெண்கள் காட்டன் நாப்கின்களை உபயோகிப்பதில்லை. மற்ற நாப்கின்களை விட காட்டன் நாப்கின்கள் சிறந்தது என்பது படித்த பெண்களுக்கு தெரிந்திருந்தாலும் அதனை உபயோகிப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அதனால் விலையும் அதிகமாக இருக்கிறது.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் செய்ய வேண்டிய, தவிர்க்க வேண்டிய விஷயங்கள்:

* மாதவிடாய் காலத்தில் பழங்கள், காய்கறிகளை வழக்கத்தை விட அதிகமாக சாப்பிடுங்கள். அது உடல் ஆற்றல் திறனை அதிகரிக்க வழிவகை செய்யும்.

*உடலில் நீர்ச்சத்தை பராமரிப்பதும் முக்கியம். அதனால் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அது வலியை குறைக்க உதவும். இடுப்பு பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

*டார்க் சாக்லேட்டையும் சாப்பிடலாம். அது பசியை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அதோடு மனநிலையிலும் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.

* மாதவிடாய் காலத்தில் பேரீச்சம் பழத்தையும் தவறாமல் சாப்பிட வேண்டும். அதில் இருக்கும் இரும்பு சத்து மாதவிடாயின்போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடு செய்ய உதவும்.

* மாதவிடாய் காலத்தில் உடல் சுத்தத்தை பராமரிப்பதும் முக்கியம். நாப்கின்களை அதிகபட்சம் 6 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும். 4 மணி நேரத்திற்குள் மாற்றுவது நல்லது.
மாதவிடாய்
கப்கள் உபயோகித்தால் 2 முதல் 3 மணி நேரத்திற்குள் மாற்ற வேண்டும்.

* மாதவிடாயின்போது தினமும் இருமுறை குளிப்பதும் நல்லது. அது வலியை குறைக்கும். மன நிலையையும் மேம்படுத்த வழிவகை செய்யும்.

*வழக்கமாக செய்யும் உடற்பயிற்சியை மாதவிடாய் காலத்திலும் தவறாமல் பின் தொடர வேண்டும். உடல் இயக்கம் செயல்பாட்டில் இல்லாமல் போனால் வலி அதிகரிக்கும். குறைந்தபட்சம் நடைப்பயிற்சி மேற்கொள்வது வலியை குறைக்கும். மனதிற்கும் இதமளிக்கும்.

* இரவில் தூங்க செல்லும்போது நாப்கின்களை அப்புறப்படுத்தக்கூடாது. துரித உணவுகள், உப்பு சேர்க்கப்பட்ட சிப்ஸ்களை அதிகம் உட்கொள்ளக்கூடாது. அவைகளை தவிர்ப்பது உடலில் திரவத்தின் இருப்பை அதிகரிக்க செய்யும்.

* காபின் கலந்த பானங்களையும் தவிர்க்க வேண்டும். அதனை அதிகம் பருகுவது வலியை அதிகரிக்க செய்துவிடும்.

*நாப்கின்களை உபயோகித்த பிறகு அதனை சுகாதாரமான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிவறையில் நாப்கினை போடுவதை தவிர்க்க வேண்டும்.

*உடலில் ஈஸ்ட்ரோஜன் அளவு குறைவாக இருந்தால் வலி அதிகரிக்கும். வலி அதிகம் இருந்தால் டாக்டரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

Tags:    

Similar News