செய்திகள்
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது
கள்ளக்குறிச்சி அருகே 11 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி:
சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தில் 5-ம் வகுப்பு படித்து வரும் 11-வயது சிறுமியை அதே கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் மகன் பழனிச்சாமி(வயது 38) அவரது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி வழக்குப் பதிவு செய்து பழனிசாமியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்.
இந்த நிலையில் அமைதி மற்றும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு பாதகமான நடவடிக்கையில் பழனிசாமி ஈடுபட்டுள்ளதால் அவரை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் பரிந்துரை செய்தார்.
இதை ஏற்று கலெக்டர் கிரண்குராலா உத்தரவின் பேரில் பழனிசாமியை தடுப்புக்காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த உத்தரவை சிறையில் இருக்கும் பழனிசாமியிடம் போலீசார் தெரிவித்தனர்.