கிறித்தவம்
மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது

மயிலாடி காமராஜர் நகரில் புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று நடக்கிறது

Published On 2022-02-12 04:16 GMT   |   Update On 2022-02-12 04:16 GMT
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது.
மயிலாடி காமராஜர் நகரில் புதிதாக புனித செபஸ்தியார் ஆலயம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணிக்கு நடக்கிறது. புதிய ஆலயத்தை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை அர்ச்சித்து திறந்து வைக்கிறார். சிறப்பு விருந்தினராக திரைப்பட தயாரிப்பாளரும் கலப்பை மக்கள் இயக்க தலைவருமான பி.டி. செல்வகுமார் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். தொடர்ந்து இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை ஜான் கென்னடி, ஊர் தலைவர் முத்து கணேசன், செயலாளர் சகாய சஜிஷ், பொருளாளர் சுபின் சன் மற்றும் நிர்வாகிகள் பங்கு மக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News