செய்திகள்
தடுப்பூசி முகாம்

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கவில்லை: அமைச்சர் மா. சுப்பிரமணியன்

Published On 2021-09-26 16:54 GMT   |   Update On 2021-09-26 16:54 GMT
அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை மா. சுப்பிரமணியன் விமர்சனம் எழுப்பியுள்ளார்.
தஞ்சை மாவட்டத்தில் மூன்றாவது மெகா சிறப்பு தடுப்பூசி முகாம் 745 இடங்களில் நடைபெற்றது. தஞ்சை அடுத்த முன்னையம்பட்டியில் நடைபெற்ற 3-வது மெகா தடுப்பூசி முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘மத்திய அரசிடமிருந்து பணம் செலுத்தி இதுவரை 4 கோடியே 19 லட்சத்து 26 ஆயிரத்து 769 தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கொரோனா 3-வது அலை தொடங்கவில்லை. 115 கோடி தடுப்பூசிகள் இந்தியாவிற்கே தேவைப்படும்போது இந்தியாவில் தயாராகும் தடுப்பூசிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பது ஏற்க இயலாதது. அ.தி.மு.க. ஆட்சியில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து போதுமான அளவிற்கு விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தவில்லை’’ என்றார்.
Tags:    

Similar News