செய்திகள்
கூலி உயர்வு வழங்கக்கோரி வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் அருகே வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுகாவில் தலைஞாயிறு, பிராந்தியங்கரை, மூலக்கரை, ஓரடியம்புலம், பஞ்சநதிக்குளம் உள்பட 25-க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு பணியாற்றும் வாணிப கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு அந்தந்த நெல் கொள்முதல் நிலையங்கள் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் மாத ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.