செய்திகள்
கோப்புப்படம்

கொல்கத்தா: துர்கா பூஜை பந்தல் மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு

Published On 2021-10-12 12:30 GMT   |   Update On 2021-10-12 12:30 GMT
மேற்கு வங்காளத்தில் உள்ள ஸ்ரீபூமி துர்கா பூஜை பந்தலில் அமைக்கப்பட்டுள்ள மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக விமானிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை நடைபெற்று வருகிறது. பொது இடங்களில் மிகப்பெரிய அளவிலான பந்தல் தயார் செய்து அதில் சுவாமி துர்கா சிலை வைத்து வழிபாடு செய்வார்கள். இந்த பந்தலை சுற்றியுள்ள இடங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

மேற்கு வங்காள மாநிலம் தெற்கு தும்தும் பகுதியில் ஸ்ரீபூமி துர்கா பூஜா பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பந்தல் பிரமாண்ட விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஜொலிக்கும் மின் விளக்குகளால் விமானத்தை இயக்குவதில் பாதிப்பு ஏற்படுவதாக மூன்று விமானத்தின் கேப்டன்கள் புகார் அளித்துள்ளனர்.



கொல்கத்தா விமான நிலைய அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டார்களா? என்பது குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.
Tags:    

Similar News