ஆன்மிகம்
மலை மாதேஸ்வரா கோவில்

மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்வு: முடி காணிக்கை செலுத்த அனுமதி

Published On 2021-10-18 08:18 GMT   |   Update On 2021-10-18 08:18 GMT
கொரோனா பரவல் காரணமாக மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா மாதேஸ்வரன் மலையில் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்தெல்லாம் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். கொரோனா பரவல் காரணமாக மலை மாதேஸ்வரா கோவிலில் பக்தர்களுக்கான அனைத்து சேவைகளும் நிறுத்தப்பட்டு இருந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதற்கிடையே மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு முடி காணிக்கை, லட்டு பிரசாதம் உள்ளிட்ட சேவைகள் ஆரம்பமாகுமா என்று பக்தர்களிடையே கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக சாம்ராஜ்நகர் மாவட்ட கலெக்டர் எம்.ஆர்.ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:-

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் பிரசித்தி பெற்ற மலை மாதேஸ்வரா கோவிலில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன்படி கோவிலில் அன்னதானம், முடிகாணிக்கை, பக்தர்கள் வேண்டி இழுக்கும் ருத்ராக்‌ஷி தேர் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இன்று(நேற்று) முதல் ஆரம்பமாகிறது. மேலும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதம் வினியோகிக்கிப்படும். ஆனாலும் பக்தர்கள் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Tags:    

Similar News