செய்திகள்
தாமரை எஸ்.ராஜேந்திரன்

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும்- தாமரை எஸ்.ராஜேந்திரன் பேச்சு

Published On 2019-11-13 11:34 GMT   |   Update On 2019-11-13 11:34 GMT
தமிழகத்தில் வருகிற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று அரசு கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் பேசியுள்ளார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் செல்வராஜ் வரவேற்று பேசினார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சிவ சுப்பிரமணியம், மாவட்ட ஆவின் பால்வள துணைத் தலைவர் தங்கபிச்சமுத்து, மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட இணை செயலாளர் கண்ணகி குப்புசாமி, மாவட்ட துணை செயலாளர் வாசுகி ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் சீனிவாசன், ராமச்சந்திரன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சந்திரசேகர், மாணவரணி சங்கர், இளைஞரணி சிவசங்கர், மகளிரணி ஜீவா, வக்கீல் பிரிவு வெங்கடாஜலபதி, சிறுபான்மை பிரிவு அக்பர் ஷெரிப், விவசாய பிரிவு சாமிநாதன், இளைஞர் பாசறை ரீடு செல்வம், தகவல் தொழில்நுட்ப பிரிவு சாமிநாதன், ஒன்றிய செயலாளர்கள் அரியலூர் செல்வராஜ், திருமானூர் குமரவேல், ஆண்டிமடம் மருதமுத்து,

தா.பழுர் வரதராஜன், ஜெயங்கொண்டம் கல்யாண சுந்தரம், நகர செயலாளர் அரியலூர் கண்ணன், ஜெயங்கொண்டம் செல்வராஜ், பேரூராட்சி செயலாளர் உடையார் பாளையம் பெருமாள், வரத ராஜன்பேட்டை லாரன்ஸ், தாமரை கணேசன், மாநில ஒப்பந்தக்காரர் பிரேம்குமார், பால் சொசைட்டி துணைத் தலைவர் பாஸ்கர், வக்கீல் கோபாலகிருஷ்ணன், பாரிவள்ளல், அரசு வக்கீல் சண்முகம், ராமகோவிந்த ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு தலைமை கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை. எஸ்.ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ., ராமஜெயலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கினர். தமிழக அரசு தலைமை கொறடா தாமரை. எஸ்.ராஜேந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடை பெறவுள்ளது. நாம் எப்படி தேர்தல் பணியாற்றுவது குறித்து தான் இந்த ஆலோசனை கூட்டம். கடந்த முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றோம்.

பின்னர் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தோம். ஆனால் அரியலூர் ஜெயங்கொண்டம் பகுதியில் சட்டமன்ற தேர்தலை விட நாடாளுமன்ற தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றிருந்தோம். முதல்வரே என்னை அழைத்து பாராட்டினார்.

விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். முக.ஸ்டாலினின் பொய் பிரச்சாரம் எடுபடவில்லை. உள்ளாட்சி தேர்தலில் ஜெயிக்க வேண்டும் என்றால் நாம் இப்போதிலிருந்தே முழுமூச்சாக பாடுபட வேண்டும். தி.மு.க.வினரின் பொய் பிரச்சாரம், தவறான வாக்குறுதிகள், நமது அரசு செய்த சாதனைகள், திட்டங்கள் குறித்து மக்களிடையே எடுத்து கூறி வாக்குகள் சேகரிக்க வேண்டும்.

நாம் அனைத்து இடங்களிலும் வெற்றி பெறுவது உறுதி. அரியலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று சரித்திர சாதனை படைக்க வேண்டும். அ.தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் வருகிற 15,16 ஆகிய இரு தினங்களிலும் அமைச்சரும், அமைப்பு செயலாளருமான வளர்மதி, அரசு கொறடாவும், மாவட்ட செயலாளருமான தாமரை.எஸ்.ராஜேந்திரன், ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., ஆகியோர் முன்னிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் நகர்மன்ற தலைவருக்கு ரூ.10ஆயிரம், நகர்மன்ற வார்டு உறுப்பினருக்கு ரூ.2500, பேரூராட்சி தலைவருக்கு ரூ.5000, பேரூராட்சி வார்டு உறுப்பினருக்கு ரூ.1500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருக்கு ரூ.5000, ஒன்றியகுழு உறுப்பினருக்கு ரூ.3000 செலுத்தி விருப்ப மனுக்கள் பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட தலைமை யாரை வேட்பாளராக அறிவிக்கின்றதோ? அவரது வெற்றிக்கு நாம் அயராது பாடுபட வேண்டும் என்றார். முடிவில் நகரதலைவர் வேலுசாமி நன்றி கூறினார்.

Tags:    

Similar News