செய்திகள்
தமிழகத்தில் ஒரே நாளில் 4¼ லட்சம் பேருக்கு தடுப்பூசி
தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் நேற்று 2,786 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்தது. இதில் நேற்று ஒரே நாளில் 4 லட்சத்து 32 ஆயிரத்து 44 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை 1 கோடியே 32 லட்சத்து 59 ஆயிரத்து 228 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 4 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி போட்டுக்கொண்டது இதுவே முதல் முறையாகும்.