செய்திகள்
உயிரிழப்பு

திருக்குவளையில் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழப்பு

Published On 2021-11-21 10:28 GMT   |   Update On 2021-11-21 10:28 GMT
திருக்குவளையில் குளத்தில் மூழ்கி என்ஜினீயரிங் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேளாங்கண்ணி:

பரமக்குடி ஆரியநேந்தல் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் இருளன்சேதுபதி (வயது 19). இவர் திருக்குவளையில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கல்லூரி முடிந்து இருளன்சேதுபதி மற்றும் அவரது நண்பர்களான நவீன்வரதன், கவுசிக்ராஜன், நிஷாந்த், கோகுல்ராஜன், கோகுல் ஆகியோருடன் திருக்குவளையில் உள்ள தியாகராஜ சுவாமி கோவிலுக்கு சென்றுள்ளனர்.

பின்னர் அங்கு உள்ள குளத்தில் நவீன்வரதன், கவுசிக்ராஜன், இருளன்சேதுபதி ஆகிய 3 பேரும் குளித்துள்ளனர். அப்போது திடீரென இருளன்சேதுபதி தண்ணீரில் மூழ்கி மாயமானார். உடனே அருகில் இருந்தவர்கள் குளத்தில் இறங்கி தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த தலைஞாயிறு தீயணைப்பு வீரர்கள், திருக்குவளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து குளத்தில் இறங்கி இருளன் சேதுபதியின் உடலை மீட்டனர்.

பின்னர் உடலை நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News