செய்திகள்
தற்கொலை

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை

Published On 2019-08-19 07:22 GMT   |   Update On 2019-08-19 07:22 GMT
திருவள்ளூர் அருகே காதலன் கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் அடுத்த வெள்ளேரிதாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமிகாந்தன். இவரது மகள் நந்தினி(19).

இவர் வேப்பம்பட்டு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி., முதலாமாண்டு படித்து வந்தார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தினேசுக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. தினேஷ் நந்தினியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பலமுறை அவருடன் உறவு வைத்துள்ளார். இதன் விளைவாக அவர் கர்ப்பம் அடைந்துள்ளார். கருவைக் கலைத்தால் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார்.

இதனால் கடந்த ஏப்ரல் மாதம் கருவை கலைத்தனர். கருவை கலைத்து பின் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த நந்தினி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கையறையில் மின் விசிறியில் புடவையால் தூக்கில் தொங்கினார். கடைக்கு சென்ற அவரது தாயார் சுமதி வீட்டிற்கு வந்து பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடந்தார்.

நந்தினியை சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே மாணவி நந்தினி இறந்து விட்டதாக கூறினர்.

மாணவியின் தந்தை லட்சுமிகாந்தன் கொடுத்த புகாரின் பேரில், மணவாள நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News