செய்திகள்
விபத்து

தக்கலை அருகே காதல் திருமணம் செய்த என்ஜினீயர் விபத்தில் பலி

Published On 2021-09-26 09:59 GMT   |   Update On 2021-09-26 09:59 GMT
தக்கலை அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் காதல் திருமணம் செய்த என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தக்கலை:

குலசேகரம் அருகே உண்ணியூர் கோணம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவரது மகன் ஜெனிஸ் ஜாண் (வயது 35).

திருவனந்தபுரம் ரெயில்வே தகவல் தொடர்பு துறையில் மென்பொருள் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஆன்சி சர்மிளா (25) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறார்.

ஜெனிஸ் ஜாண் தற்போது வில்லுக்குறி பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்தார். மேலும் குலசேகரம் பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தார். ஜெனிஸ் ஜாண் நேற்று குலசேகரத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த வீட்டை பார்த்துவிட்டு வில்லுக்குறிக்கு திரும்பி கொண்டிருந்தார். தக்கலை அருகே அழகர்அம்மன் கோவில் எடை மேடை அருகில் சென்ற போது அந்த வழியாக வந்த அரசு பஸ் ஜெனிஸ் ஜாண் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்து தக்கலை இன்ஸ்பெக்டர் சுதேசன் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News