ஆன்மிகம்
கொரோனா பரவல் எதிரொலி: பேரூர் படித்துறையில் திதி கொடுக்க பக்தர்களுக்கு தடை
கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு, அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம்.
கோவையில் பிரசித்தி பெற்ற பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள படித்துறையில் இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு, அவர்களது உறவினர்கள் திதி கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் கோவை உள்பட பல்வேறு வெளி மாவட்டம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறைக்கு திரண்டு வந்து இறந்துபோன தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
இதன்மூலம் இறந்து போன தங்களது முன்னோருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுதவிர, பேரூர் படித்துறையில் பக்தர்கள் வாரம் முழுக்க தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் பேரூர் படித்துறையில் திதி கொடுத்து, தர்ப்பண வழிபாடு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் தடை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்மூலம் இறந்து போன தங்களது முன்னோருடைய ஆத்மாக்களின் ஆசீர்வாதம் தங்களுக்கு கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதுதவிர, பேரூர் படித்துறையில் பக்தர்கள் வாரம் முழுக்க தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தும் வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பக்தர்கள் பேரூர் படித்துறையில் திதி கொடுத்து, தர்ப்பண வழிபாடு செய்ய கோவில் நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலின் தீவிரம் அதிகரிக்கும் பட்சத்தில் தடை மேலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.