செய்திகள்
கைது

திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- டிரைவர் கைது

Published On 2021-10-27 22:46 GMT   |   Update On 2021-10-27 22:46 GMT
திருவள்ளூர் அருகே மணல் கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் பகுதி அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு லாரியை பறிமுதல் செய்த போலீசார் மணல் கடத்தியதாக திருவள்ளூரை அடுத்த ஆண்டர்சன் பேட்டையை சேர்ந்த லாரி டிரைவரான வீரராகவன் (வயது 50) என்பவரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Tags:    

Similar News