ஆன்மிகம்
குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவில்

குன்றக்குடி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து: மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது

Published On 2021-11-10 06:01 GMT   |   Update On 2021-11-10 06:01 GMT
இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.

இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
Tags:    

Similar News