உள்ளூர் செய்திகள்
FILEPHOTO

கோவிலுக்கு சென்ற பெண் மாயம்

Published On 2022-04-16 10:22 GMT   |   Update On 2022-04-16 10:22 GMT
கோவிலுக்கு சென்ற பெண் மாயமான சம்பவத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை பெரிய கோவில் அக்கறை வளைவு பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி விஜயலட்சுமி (வயது 36) இவர்கள் இருவரும் தங்கள் மூன்று குழந்தைகளுடன் திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சாமி கும்பிட வந்தனர்.

முன்னதாக அவர்கள் அங்குள்ள ஒரு தனியார் லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். பின்னர் விஜயலட்சுமியை விடுதியில் விட்டுவிட்டு சிவகுமார் தனது குழந்தைகளுடன் அம்மா மண்டபம் பகுதியில் குளிக்கச் சென்றார் குளித்துவிட்டு மீண்டும் வந்து பார்த்தபோது,

லாட்ஜில் மனைவியைக் காணாமல் திடுக்கிட்டார் அவர் எங்கு சென்றார் என்ன ஆனார் என்று தெரியவில்லை இது பற்றி சிவகுமார் திருவரங்கம் போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் அரங்கநாதன் வழக்குப்பதிவு செய்து மாயமான விஜயலட்சுமியை தேடி வருகிறார்.    

Tags:    

Similar News