இந்தியா
மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப் குமார்

கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் குத்திக்கொலை

Published On 2021-12-03 04:12 GMT   |   Update On 2021-12-03 04:12 GMT
கேரளாவில் மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப் குமார் கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:

கேரளா மாநிலம் பத்தனம்திட்டா அருகே உள்ள திருவாளா பகுதியில் நேற்று இரவு மார்க்சிஸ்ட் கட்சி பிரமுகர் சந்தீப் குமார் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள கேரள போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், சந்தீப் குமாரை ஆர்எஸ்எஸ்-ஐ சேர்ந்தவர்கள் கொலை செய்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியது.

ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த பாஜக, "சந்தீப் குமார் கொலைக்கும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்த தொடர்பும் இல்லை" என கேரள பாஜக விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்.. இரண்டாம் உலகப்போர் குண்டு வெடித்ததால் பரபரப்பு- 4 பேர் படுகாயம்
Tags:    

Similar News