செய்திகள்

தமிழ்நாட்டிற்கும், இந்திய அரசியலுக்கும் ஒளிதரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்: கமல்

Published On 2019-03-10 05:22 GMT   |   Update On 2019-03-10 07:47 GMT
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியதற்காக, தேர்தல் ஆணையத்திற்கு அக்கட்சியின் தலைவர் கமல் நன்றி தெரிவித்துள்ளார். #Election2019 #MNM #Kamal
பாராளுமன்ற தேர்தலுக்கான தேதியை இன்னும் ஒன்றிரண்டு நாட்களுக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. இந்நிலையில் இன்று கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்தது.

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்துள்ள கமல், இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச்’ சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி. பொருத்தமான சின்னம்தான். மக்கள் நீதி மய்யம் தமிழ்நாட்டிற்கும் இந்திய அரசியலுக்கும் ஒளி தரும் புது விளக்காய் இன்று முதல் மிளிரும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News