செய்திகள்
வெடிமருந்து தொழிற்சாலை அருகே சாலையில் உலா வந்த கரடி
தற்போது ஊரடங்கால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
குன்னூர்:
குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கு காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. அதன்படி நேற்று காலை 6 மணியளவில் ஜெகதளா சாலையில் அருவங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கரடி உலா வந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிகள் சென்றது. இதையொட்டி அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
குன்னூர் அருகே உள்ள அருவங்காடு பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலைக்கு அருகில் அடர்ந்த வனப்பகுதி இருக்கிறது. இங்கு காட்டெருமை, கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.
இந்த நிலையில் தற்போது ஊரடங்கால் சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி காணப்படுகிறது. இதனால் வனவிலங்குகள் சுதந்திரமாக உலா வருகின்றன. அதன்படி நேற்று காலை 6 மணியளவில் ஜெகதளா சாலையில் அருவங்காடு பஸ் நிறுத்தம் அருகில் கரடி உலா வந்தது. சிறிது நேரம் அங்கேயே சுற்றிய கரடி அதன்பிறகு அருகில் உள்ள வனப்பகுதிகள் சென்றது. இதையொட்டி அங்கு வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.