செய்திகள்
சிறுவர் கிரிக்கெட்

சிறுவர் கிரிக்கெட்: சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன்

Published On 2019-12-01 08:48 GMT   |   Update On 2019-12-01 08:48 GMT
மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி சாம்பியன் பட்டம் வென்றது.
மாநில அளவிலான ஜெய்கிருஷ்ணா நினைவு பள்ளிகள் கிரிக்கெட் போட்டி (16 வயதுக்கு உட்பட் டோர்) சென்னையில் நடந்தது. இதன் இறுதிப்போட்டியில் சென்னை பப்ளிக் பள்ளி (திருமழிசை)- ஸ்ரீவெங்கடேஷ்வரா வித்யாலயா அணிகள் மோதின. முதலில் ஆடிய பப்ளிக் பள்ளி 40 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. தருண் 67 பந்தில் 93 ரன்னும், ஹேமநாத் 78 ரன்னும் குவித்தனர்.

பின்னர் விளையாடிய ஸ்ரீவெங்கடேஷ்வரா 7 விக்கெட் இழப்புக்கு 184 ரன்னேயே எடுத்தது. இதனால் சென்னை பப்ளிக் அணி 63 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனது.

இறுதி போட்டியில் சிறந்த வீரர்களாக ஹேமநாத், தருண், கி‌ஷன் (சென்னை பப்ளிக் பள்ளி), பிரஞ்சன், நித்தீஷ், விக்னேஷ் ஆகியோர் தேர்வு பெற்றனர்.
Tags:    

Similar News