செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்திற்கு இன்று இரவு 7.90 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வந்தடைந்தன

Published On 2021-09-23 13:34 GMT   |   Update On 2021-09-23 13:34 GMT
7.45 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும், 45 ஆயிரம் கோவேக்சின் டோஸ்களும் தமிழகம் வந்தடைந்தன.
தமிழக அரசு தகுதியுடைய அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திட வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்காக இரண்டு முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தியது. முதல் முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். 2-வது முகாமிலும் லட்சக்கணக்கானோருக்கு தடுப்பூசி  செலுத்தப்பட்டது.

அதன்பின் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நிலவியது. இருந்தாலும் மத்திய அரசிடம் தொடர்ந்து முறையிட்டு தமிழகத்திற்கான தடுப்பூசிகளை விரைவாக பெற்று வருகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை 3-வது மிகப்பெரிய தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று இரவு தமிழகத்திற்கு 7.45 லட்சம் கோவிஷீல்டு டோஸ்கள், 45 ஆயிரம் கோவேக்சின் டோஸ்கள் வந்தடைந்தன.
Tags:    

Similar News