செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேர் கைது
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் சதீஷ்குமார். கேரளாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னபூரணி, தனது சகோதரி குடும்பத்துடன் ஜக்கம்பட்டியில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றபோது வீட்டில் இருந்த 6 பவுன் தங்க நகை திருடப்பட்டது. இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஜக்கம்பட்டியை சேர்ந்த பழனிகுமார் என்பவர் நகையை திருடி மணி என்பவர் மூலம் அடகு வைத்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்து நகையையும் பறிமுதல் செய்தனர்.