ஆன்மிகம்
சுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழா

குலசேகரன்பட்டினம் அனுகூலபுரம் சுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழா இன்று தொடங்குகிறது

Published On 2021-09-27 05:05 GMT   |   Update On 2021-09-27 05:05 GMT
குலசேகரன்பட்டினம் அனுகூலபுரம் சுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சங்கு முக தீர்த்தவாரியுடன் தொடங்குகிறது.
தமிழ்நாடு நாட்டார் மருத்துவர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட குலசேகரன்பட்டினம் அனுகூலபுரம் சுந்தராச்சி அம்மன் கோவில் கொடை விழா இன்று (திங்கட்கிழமை) இரவு 7 மணிக்கு சங்கு முக தீர்த்தவாரியுடன் தொடங்குகிறது.

இரவு 9 மணிக்கு கும்பாபிஷேகம், இரவு 10 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு தீபாராதனை, நாளை(செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு மஞ்சள் பெட்டி எடுத்தல், பகல் 12 மணிக்கு தீபாராதனை, மாலை 4 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடுதல், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு வில்லிசை, இரவு 11 மணிக்கு முளைப்பாரி எடுத்தல், இரவு 12 மணிக்கு அம்மன் அலங்கார பூஜையும், வரும் செப்.29ம் தேதி காலை 9 மணிக்கு சிறப்பு பூஜையும் தொடர்ந்து பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.
Tags:    

Similar News