செய்திகள்
கோப்பு படம்

கோவை அருகே ரூ.50 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்

Published On 2021-04-04 11:20 GMT   |   Update On 2021-04-04 11:20 GMT
கோவை மாவட்டம் சூலூர் சட்டபேரவை தொகுதியில் தேர்தலையொட்டி தீவிர ரோந்து பணியில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சூலூர்:

கோவை மாவட்டம் சூலூர் சட்டபேரவை தொகுதியில் தேர்தலையொட்டி தீவிர ரோந்து பணியில் போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர்.சூலூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர்களிடம் இருந்து 120 மது பாட்டில்களையும் அதேபோல் சூலூர் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சுல்தான் பேட்டை போலீஸ் நிலையத்தில் 90 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோன்று செட்டிபாளையத்தில் 80 மது பாட்டில்களும், அதேபோல் கருமத்தம்பட்டியில் 100 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என்று போலீசார் கூறினார்.

Tags:    

Similar News