செய்திகள்
மேட்டூர் அணை

மேட்டூர் அணை நீர்மட்டம் 3 நாட்களில் 2 அடி சரிவு

Published On 2021-08-04 04:19 GMT   |   Update On 2021-08-04 04:19 GMT
மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. இதையடுத்து அந்த அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரி நீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது 6 ஆயிரம் கன அடி மட்டுமே காவிரியில் திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று 6 ஆயிரத்து 690 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மேலும் சரிந்து 6 ஆயிரத்து 308 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து காவிரியில் 14 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 500 கன அடி தண்ணீரும் என மொத்தம் 14 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்த விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

கடந்த 1-ந் தேதி 82.53 அடி யாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக சரிந்து நேற்று 81.21 அடியானது. இன்று மேலும் சரிந்து 80.49 அடியானது. இதனால் கடந்த 3 நாட்களில் மட்டும் மேட்டூர் அணை நீர்மட்டம் 2 அடி சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News