செய்திகள்
தர்மபுரியில் பள்ளி மாணவி மாயமானது குறித்து அவரது தந்தை போலீசில் புகார் செய்தார். போலீசார் மாணவியை தேடி வருகிறார்கள்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் ரேகடஅள்ளி பகுதியை சேர்ந்தவர் குமரேசன். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர் ஜாலியூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தார்.
இந்தநிலையில் குமரேசனின் மகள் கடந்த 15-ந்தேதி காலை பள்ளிக்கு சென்று வருவதாக கூறி சென்றார். பின்னர் மாலை வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து குமரேசன் அவரது மகளை பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே குமரேசன் பொம்மிடி போலீஸ் நிலையத்தில் எனது மகளை காணவில்லை என்றும் அவரை கண்டு பிடித்து தரும்படியும் புகார் செய்தார்.
இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.