செய்திகள்
மரணம்

நெல்லை டவுனில் இன்று குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

Published On 2020-01-10 08:31 GMT   |   Update On 2020-01-10 08:31 GMT
நெல்லை டவுனில் இன்று குளத்தில் மூழ்கி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுண் பழனி தெருவைச் சேர்ந்தவர் மகபூப்ஜான் (வயது 55). இவர் டவுனில் உள்ள ஒரு மருந்து கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இன்று காலை மகபூப்ஜான் நயினார்குளத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீர் என்று அவர் ஆழமான தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

இதை அந்த பகுதியில் உள்ள காய்கறி லோடுமேன்கள் பார்த்து, தண்ணீரில் இறங்கி அவரை கரைக்கு இழுத்து வந்தனர். ஆனால் அதற்குள் மகபூப்ஜான் பரிதாபமாக இறந்து விட்டார். அவர் நீச்சல் தெரியாததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை.

இதுதொடர்பாக நெல்லை டவுண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News