செய்திகள்
கோப்புபடம்

இளையான்குடி அருகே சூதாடிய 6 பேர் கைது

Published On 2020-11-10 13:59 GMT   |   Update On 2020-11-10 13:59 GMT
இளையான்குடி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இளையான்குடி:

இளையான்குடி அருகே உள்ள முள்ளியரேந்தல் கண்மாய்க்குள் ஒரு சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அங்கு சென்ற இளையான்குடி போலீசார் பணம் வைத்து சூதாடிய முள்ளியரேந்தல் கிராமத்தை சேர்ந்த தாமோதரன் (வயது 42), விஜயசாமி (40), கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சிவகுமார் (44), சிறுபாலை கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சுனன் (38), நகரகுடியைச் சேர்ந்த சம்பத் (29), பெத்தனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (45) ஆகிய 6 பேரை கைது செய்தனர். சூதாட்டத்துக்கு பயன்படுத்திய சீட்டுக்கட்டுகள், ரூ.4 ஆயிரத்து 100-ஐ பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News