செய்திகள்
ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்கள் ராஜினாமா
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தேசிய மாநாடு கட்சியின் இரண்டு முக்கிய தலைவர்கள், கட்சியின் உறுப்பினர் பதவி உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில தேசிய மாநாடு கட்சியின் முன்னாள் அமைச்சர் சுர்ஜித் சிங் ஸ்லாதியா. இவர் தனது அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவியில் இருந்தும் விலகியுள்ளார். அதேபோல் மற்றொரு தலைவரான தேவந்தர் சிங் ராணாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.