உள்ளூர் செய்திகள்
.

தாய், தந்தை பிரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சி

Published On 2022-01-21 08:51 GMT   |   Update On 2022-01-21 08:51 GMT
சேலத்தில் தாய், தந்தையை பிரிந்ததால் வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
சேலம்:

சேலம் அம்மாப்பேட்டை கார்பெட் தெருவை சேர்ந்தவர்   கேசவன். இவரது மகன் கார்த்திக் (வயது 21).  இவரது பெற்றோர் கடந்த 10 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இவர்களை   சேர்த்து வைக்க கார்த்திக்   பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் அந்த முயற்சி கை கொடுக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த கார்த்திக்  நேற்று வீட்டில் வைத்து  எலி மருந்தை  தின்று  தற்கொலைக்கு முயன்றார்.  இதனை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு   ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

 அங்கு  அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News