செய்திகள்
அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில்

உடுமலை வழியாக செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து

Published On 2021-05-15 08:14 GMT   |   Update On 2021-05-15 08:14 GMT
உடுமலை வழியாக செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உடுமலை:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளம், பாலக்காடு, பொள்ளாச்சி, உடுமலை வழியாக மதுரைக்கும், அங்கிருந்து  திருவனந்தபுரத்திற்கும்  அமிர்தா எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ரெயில்களில் பயணிப்போர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்திருப்பதால் பயணிகள் ரெயில், சிறப்பு ரெயில்கள் ரத்து செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06343) வருகிற 31-ந்தேதி வரையும், மதுரையில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரெயில் (ரெயில் எண் 06344) இன்று முதல் அடுத்த மாதம் ஜூன் 1-ந்தேதி வரையிலும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News