செய்திகள்
லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்
இந்தோ- சீனா எல்லையில் அமைந்துள்ள லடாக்கில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா எல்லைப் பகுதியில் உள்ள லடாக்கில் இன்று மாலை 4.27 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், ரிக்டர் அளவில் அது 5.4 பதிவானதாகவும் நில அதிர்வுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.
லடாக்கின் லே பகுதியில் இருந்து 92 கி.மீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம், 10 கி.மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நில அதிர்வை உணர்ந்தவுடன் அச்சத்தால் வீட்டை விட்டு வெளியேறினர். கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீர் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.