உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம்

கடலூர் முதுநகரில் பா.ம.க. சார்பில் நடந்தது- ரெயில் திட்டங்களை உடனே நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2022-04-16 09:24 GMT   |   Update On 2022-04-16 09:24 GMT
சென்னை, மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட 9 ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அலுவலகம் முன்பு பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர்:

சென்னை, மாமல்லபுரம், கடலூர் உள்ளிட்ட 9 ரெயில் திட்டங்களை விரைந்து செயல்படுத்த கோரி கடலூர் முதுநகர் ரெயில் நிலையம் அலுவலகம் முன்பு பாமக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் சண். முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் கார்த்திகேயன் ரவிச்சந்திரன், மகேஷ், மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநகர செயலாளர் ராஜசேகர் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்.

இதில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் பழ. தாமரைக்கண்ணன், தேவதாஸ் படையாண்டவர், மாநில நிர்வாகிகள் சந்திரசேகரன், கோபிநாத், ரத்தினவேல், சகாதேவன், ரமேஷ், மதி, அன்பு, பால்ராஜ், ஆனந்த், ஆறுமுகம், பிரேம், ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News