செய்திகள்
அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி முதியவர் பலி
அரக்கோணம் அருகே ரெயிலில் சிக்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
அரக்கோணம்- சென்னை செல்லும் தண்டவாளத்தில் புளியமங்கலம் அருகே 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரெயிலில் அடிபட்டு இறந்தார்.
அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமகிருஷ்ணன், வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றகனர்.