செய்திகள்
பெட்ரோல் - டீசல் விலையை குறைக்க கோரி தாராபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசலுக்கு ஏற்றிய வரியை குறைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
தாராபுரம்:
தாராபுரத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்க கோரி தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுந்தராபுரம் அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மகளிர் அணி, இளைஞர் அணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பெட்ரோலுக்கு குறைந்த வரியை விதித்து வரும் நிலையில் தமிழக அரசு பெட்ரோல் டீசலுக்கு அதிக வரியை விதித்து ஏற்றி உள்ளது. எனவே உடனடியாக பெட்ரோல் டீசலுக்கு ஏற்றிய வரியை குறைக்க வேண்டும் என கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ருத்திரகுமார், மாவட்ட துணைத்தலைவர் சுகுமார், மாவட்ட பொருளாளர் கொங்கு ரமேஷ், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் லோகேஸ்வரன் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.