செய்திகள்
கொலை

திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை

Published On 2019-11-08 09:40 GMT   |   Update On 2019-11-08 09:40 GMT
திண்டுக்கல் அருகே கூலித்தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொடைரோடு:

திண்டுக்கல் அருகில் உள்ள ஜம்புதுரைகோட்டை ஊராட்சி ஊத்துப்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது38) கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி சண்முகவள்ளி என்ற மனைவி உள்ளார். குழந்தை இல்லை. நேற்று இரவு வீட்டிற்கு செல்லாமல் நாடகமேடையில் படுத்திருந்தார். இன்று அதிகாலை பார்த்தபோது தலை மற்றும் உடலில் பல இடங்களில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்தார்.

இது குறித்து அம்மையநாயக்கனூர் போலீசாரிடம் அவரது மனைவி சண்முகவள்ளி புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் அவர் எவ்வாறு இறந்தார்? அவரை தாக்கிய நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News