செய்திகள்
ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில், “அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய பெற்றோர் நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை” என்று கூறியுள்ளார்.
இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பதிவில், “அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு 3-வது முறையாக தொடர்ச்சியாக தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியான ராஜா கிருஷ்ணமூர்த்திக்கு இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவருடைய பெற்றோர் நம்முடைய மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இது உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கு கிடைத்த பெருமை” என்று கூறியுள்ளார்.