ஆன்மிகம்
தேசூரில் ரேணுகாம்பாள் கோவிலில் தை மாத திருவிழா
தேசூரில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
தேசூரில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலில் தை மாத திருவிழா நடந்தது. கடந்த 29-ந் தேதி ரேணுகாம்பாள் அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம் மூலம் அபிஷேகம் செய்தனர். பின்னர் பகல் 3 மணி அளவில் பூ கரகம் ஜோடிக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர் அப்போது பக்தர்கள் கூழை பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். அங்கு பெரிய கொப்பரையில் கூழை ஊற்றி படையலிட்டு பூஜை செய்தனர்.
இரவு ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசூர் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.
இரவு ரேணுகாம்பாள் அம்மனுக்கு அலங்காரம் செய்து புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது.
இதைத்தொடர்ந்து கோவில் முன்பு உள்ள குளத்தில் தெப்பல்மேடை அமைத்து அதில் ரேணுகாம்பாள் அம்மனை வைத்து 3 நாள் தெப்பத் திருநாள் நடந்தது இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை தேசூர் நகர பொதுமக்கள் செய்திருந்தனர்.