செய்திகள்
கொரோனா பரவல்- வடுவூர் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டது
கொரோனா பரவல் காரணமாக வடுவூர் பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
வடுவூர்:
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 26-ந்தேதி முதல் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சினிமா தியேட்டர், சலூன், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.
இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
வடுவூர் ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொண்ட இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. இதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 26-ந்தேதி முதல் மேலும் ஊரடங்கு கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சினிமா தியேட்டர், சலூன், கோவில்கள், உடற்பயிற்சி கூடங்கள், சுற்றுலா தலங்களை மூட உத்தரவிடப்பட்டது.
இதனையொட்டி திருவாரூர் மாவட்டம் வடுவூரில் அமைந்துள்ள பறவைகள் சரணாலயம் மூடப்பட்டுள்ளது.
வடுவூர் ஏரியின் கிழக்கு கரையில் அமைந்துள்ள பூங்கா மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொண்ட இடங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படுகிறது.